ஒரே நாளில் 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!- ஜூன் 20-க்கு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி நாளை (ஜூன் 17 ஆம் தேதி) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 20-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை (S.S.L.C) 20.06.2022 (திங்கட்கிழமை) நண்பகல் 12.00 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் வெளியிடுகிறார்.

பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையதள பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

http://tnresults.nic.in

http://dge2.tn.nic.in

http://dge.tn.gov.in

இதுபோன்று, ஜூன் 20 காலை 9.30 மணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முதல்முறையாக ஒரே நாளில் வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

சி.கார்த்திகேயன்

Leave a Reply