சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து!-அதிகாலை நேரத்தில் நடந்த விபரீதம்!

சென்னையில் இருந்து மதுரை நோக்கி சிமெண்ட் ஏற்றிச்சென்ற கனரக லாரி ஒன்று, இன்று (17/06/2022) அதிகாலை 4:30 மணி அளவில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து தென்காசி நோக்கி செல்லும் அரசு பேருந்து ஒன்று, முன்னால் சென்றுகொண்டிருந்த சிமென்ட் லாரி மீது மோதியதில், அரசு பேருந்தில் பயணம் செய்த அனைவரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். இதில் 7 பேர் மட்டும் லேசான காயமடைந்தனர்.

இன்று (17/06/2022) அதிகாலை 4 : 30 மணி அளவில் நடந்த இந்த விபத்து குறித்த தகவல், இன்று (17/06/2022) அதிகாலை 5 மணிக்குதான் காவல்துறைக்கு தெரியவந்தது.

விபத்துக்குள்ளான அந்த அரசு பேருந்தை இன்று (17/06/2022) காலை 9.35 மணி அளவில் மீட்பு வாகனம் உதவியுடன் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

இச்சம்பவம் குறித்து திருச்சி மாநகர தெற்கு போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply