பரிட்சை’ – எந்த ஒரு மனிதனையும் முழுமையாகத் தீர்மானிக்கும் சக்தி கிடையாது; சரித்திரத்தில் இருந்ததுமில்லை!- தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை அறிவுரை.

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

‘பரிட்சை’ – எந்த ஒரு மனிதனையும் முழுமையாகத் தீர்மானிக்கும் சக்தி கிடையாது. சரித்திரத்தில் இருந்ததுமில்லை. குறைவான மதிப்பெண் (தங்களுடைய கணக்கின்படி), தேர்ச்சி பெறாத மாணவச் செல்வங்களுக்கு உங்களுடைய அன்பு அண்ணனாக என்னுடைய வேண்டுகோள்-‘உங்கள் வாழ்க்கை உங்களுக்காக ஒரு பெரிய கதவைத் திறப்பதற்கு தயாராக இருக்கிறது’துணிவோடு, தைரியமாக பயணியுங்கள்!

இவ்வாறு பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply