சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையால் விலை குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போர், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சர்வதேச சந்தையில் தட்டுப்பாடு, ஏற்றுமதி தடை போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த சில மாதங்களாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே போனது.

இதனால் பொதுமக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வந்தனர். இந்நிலையில், சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்து வருவதால் இந்தியாவிலும் விலை குறையத் தொடங்கிவிட்டதாக மத்திய உணவுத் துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள விவரங்களின்படி, சமையல் எண்ணெய்களின் சராசரி சில்லறை விலை குறையத் தொடங்கியுள்ளது. எனினும், கடலெண்ணெய் விலை மட்டும் குறையாமல் இன்னும் கிலோவுக்கு 150 ரூபாய் முதல் 190 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.

கே.பி.சுகுமார்

Leave a Reply