2030ல் தமிழகத்தின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்!- மேம்பட்ட உற்பத்தி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.

2030ம் ஆண்டில் நமது மாநிலத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தரமணி டைட்டல் பார்க்கில் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. மாநாட்டில் மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம், ஓசூர் மற்றும் பெரும்புதூர் பூங்காக்களில் சிப்காட் தொழில் புத்தாக்க மையங்கள் துவக்கி வைத்து, திருப்பூர் மற்றும் விழுப்புரத்தில் டைடல் நியோ பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி, நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி முதிர்வு கணக்கெடுப்பை முதல்வர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கே.பி.சுகுமார்

Leave a Reply