லஞ்சம் வாங்கும் காவல்துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமின்றி குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்! – சென்னை உயர்நீதிமன்றம்.

லஞ்சம் வாங்கும் காவல்துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமின்றி குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி திரு. எஸ்.எம். சுப்பிரமணியம் இன்று இதற்கான உத்தரவினை பிறப்பித்தார்.ஊழலை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்புத்துறையில், நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் வாங்குவதை கட்டுப்படுத்த உள்துறைச் செயலர் மற்றும் காவல்துறை தலைவர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கே.பி.சுகுமார்

Leave a Reply