தரமற்ற கட்டுமானங்களால் இளைஞர்களின் மரணத்துக்கு அரசு ஏற்பாடு செய்கிறது!- ராணிகஞ்ச் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கே. வர்மா குற்றச்சாட்டு.

உத்தரபிரதேச மாநிலம், ராணிகஞ்ச் சட்டமன்ற தொகுதி எல்லைக்கு உட்பட்ட பிரதாப்கரில் புதிய பொறியியல் கல்லூரி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. ஆனால், இந்த கட்டுமான பணியின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. கையால் தள்ளும் போதே பொறியியல் கல்லூரியின் கட்டுமான சுவர்கள் இடிந்து விழுகின்றன.

இந்நிலையில், கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ய ஜூன் 23 வியாழன் அன்று இங்கு வந்த சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த ராணிகஞ்ச் சட்டமன்ற உறுப்பினர் Dr.ஆர்.கே. வர்மா. இந்த கட்டடத்தை ஆய்வு செய்து; இது தரமற்ற கட்டுமானம் என்பதை தனது செய்கையின் மூலம் நாடுமுழுவதும் அம்பலப்படுத்தியுள்ளார். ஆம், அவரது கையால் தள்ளும் போதே அந்த கட்டிடத்தின் சுவர்கள் சரிந்து விழுந்தது.

ராணிகஞ்ச் சட்டமன்ற உறுப்பினர் Dr.ஆர்.கே. வர்மா.

இளைஞர்களின் எதிர்காலத்துக்கான ஏற்பாடுகளை அரசு செய்யாமல், இதுபோன்ற கட்டுமானங்களால் அவர்களின் மரணத்துக்கு ஏற்பாடு செய்கிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply