நெல்லையப்பர் திருக்கோவில் யானை காந்திமதிக்கு புதிய செருப்பு வாங்கப்பட்டுள்ளது.

நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் யானை காந்திமதிக்கு புதிய செருப்பு வாங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றான நெல்லையில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருக்கோவிலில் காந்திமதி என்ற யானை உள்ளது. 52 வயதாகும் யானை காந்திமதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆண்டுதோறும் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அனுப்பப்பட்டு யானையின் உடல் எடை மற்றும் யானையின் உடல் நன்மைக்காக மருத்துவர்களின் பரிந்துரை பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

–சி.கார்த்திகேயன்

Leave a Reply