கல்விதான் ஒருவருக்கு மிகப்பெரிய செல்வம் என்றும், அதை யாராலும் அழிக்க முடியாது என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கல்விதான் ஒருவருக்கு மிகப்பெரிய செல்வம் என்றும், அதை யாராலும் அழிக்க முடியாது என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் சிறுவம்பட்டி ஊராட்சியில் அருந்ததியர் குடியிருப்புப் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், 3 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் மாணவ – மாணவியரிடம் கலந்துரையாடினார்.

மாணவர்கள் உயர்கல்வி படித்து சமுதாயத்திற்கும் மாநிலத்திற்கும் சேவையாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்துத் தரும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply