அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு! அடிதடியில் இறங்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!-அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைப்பு.

திண்டுக்கல் சீனிவாசன்.

நாடு முழுவதும் ஆவலோடும், பதட்டத்தோடும் எதிர்பார்க்கப்பட்ட அனைத்து இந்திய அண்ணா திமுகவின் பொதுக்குழு கூட்டம், ஏற்கனவே எதிர்பார்த்தபடி இன்று போர்க்களமாக மாறிப்போனது. ஆம், ஆபாச வார்த்தைகளில் அர்ச்சனைகள், வாழ்க, ஒழிக கோஷங்கள், அடிதடி, தடியடி, ரத்த காயங்கள், ஆஸ்பத்திரியில் அனுமதி, காவல்துறையில் புகார், வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு சீல் வைப்பு, தடை உத்தரவு என அனைத்தும் அமர்க்களமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. ஏற்கனவே திட்டமிட்டபடியே இந்த வன்முறைகள் அங்கு அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. இது ஒன்றும் அதிமுகவிற்கு புதிதல்ல! இதில் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை.

ஆனால், இதற்கிடையில் தான் எடுத்த சபதத்தை எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று வெற்றிகரமாக நிறைவேற்றி காட்டியுள்ளார். ஆம், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் பொருளாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தியதற்காக ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இவற்றின் எதிர்வினையாக தன்னை அதிமுகவில் இருந்து நீக்கியது சட்ட விரோதம் என்றும், அதிமுக பொது குழுவில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரியும், கட்சிக்கு உரிமை கோரியும், இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கும் அடுத்த கட்ட நகர்வுகளை ஓ. பன்னீர்செல்வம் முன்னெடுப்பார். அதற்காக நீதிமன்றத்தையும், இந்திய தேர்தல் ஆணையத்தையும் அவர் அணுகுவார். அதற்காக யாருடைய உதவியை வேண்டுமானாலும் ஓபிஎஸ் நாடுவார்.

ஏனென்றால், இப்போது நடப்பது ஓபிஎஸ்-க்கு தர்மயுத்தம் அல்ல; இறுதி யுத்தம்.

அடுத்து என்ன நடக்கும்?! பொறுத்திருந்து பார்ப்போம்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

.

Leave a Reply