குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கினை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி செலுத்தினார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டி போடுகின்றனர்.

இன்று காலை 10 மணி முதல் தொடங்கி வாக்கு பதிவு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி  சென்னை தலைமை செயலகத்தில் குடியரசு தலைவர் தேர்தலுக்காக வைக்கபட்டுள்ள வாக்குப்பெட்டியில் தனது வாக்கினை செலுத்தினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply