கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

தமது முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக அவர் நடத்திய ஆலோசனையில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ வ வேலு, பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, வன்முறைச் சம்பவங்களால் சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதிலாக மாற்றுச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று மாநில பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply