சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது.
188 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

முதல்முறையாக, மாமல்லபுரத்தில் இந்த போட்டி நடைபெறுவதை ஒட்டி, தமிழகம் முழுவதும் இந்த விளையாட்டு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றனர்.

இளைஞர்களையும், மாணவர்களையும் இதில் ஈடுபடுத்துவதற்கு மாநில அரசு பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாமல்லபுரத்தில் விளையாட்டிற்கான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் கூறுகிறார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply