சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். பயனுள்ள கல்விப் பயணத்தில் முன்னேற அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். வரும் காலங்களில் இந்த இளைஞர்கள் வெற்றியின் புதிய உச்சங்களை எட்டுவார்கள் என நான் நிச்சயமாக நம்புகிறேன்”
எம்.பிரபாகரன்