குடியரசுத் தலைவர் பதவிக்காலத்தை நிறைவு செய்யவுள்ள ராம்நாத் கோவிந்துக்கு, பிரதமர் நரேந்திர மோதி பிரிவு உபச்சார விருந்தளித்தார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோதி, ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்து அளித்தார்.

இந்த விருந்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply