தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இதுவரை யாருக்கும் கண்டறியப்படவில்லை !-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இதுவரை யாருக்கும் கண்டறியப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாகர்கோவிலில் நான்கு பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று தெரிவித்தார்.மாநிலத்தில் அடுத்த மாதம் 7-ஆம் தேதி முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அவர் கூறினார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply