சிறு-குறு தொழில் துறையினருக்கு கடந்த 3 ஆண்டுகளில் 36 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாக அத்துறைக்கான மத்திய அமைச்சர் திரு நாராயண் ரானே கூறியுள்ளார்.
இன்று மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது இதனைத் தெரிவித்த அவர், கடந்த நிதியாண்டில் மட்டும் 13 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சிறு-குறு தொழில் துறையினர் எளிதாக கடனுதவி பெறுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாகவும் நாராயண் ரானே கூறினார்.
திவாஹர்