தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னையில் இன்று நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு குறித்த மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகள் உடனான ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய அவர், சமுதாயத்தில் குற்றங்களை தடுப்பதற்கு போதைப்பொருள் பயன்பாடு காரணமாகியுள்ளதால், அந்த பழக்கத்தையும், சமூக தீமையையும் ஒழிப்பதற்கு சமுதாயத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு என்று கூறினார்.நவீன காலத்திலும் மாபெரும் சவாலாக அமைந்துள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு குறித்து காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மாநிலம் விட்டு மாநிலத்திற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், சமூக நல அமைப்புகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லு}ரி, ஆசிரியர்கள், பெற்றேhர் என அனைவரும் ஒருமித்து செயல்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
கே.பி.சுகுமார்