ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக-வின் பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அஇஅதிமுக-வின் பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே நீடிக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக இந்த கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து அஇஅதிமுக-வின் ஒருங்கிணைப்பாளராக இருந்த திரு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் திரு வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த வழக்கில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு, புதிய பொதுக்குழு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கே.பி.சுகுமார்

Leave a Reply