மங்களுர் – சென்னை சென்ட்ரல் இடையிலான அதிவிரைவு ரயில் இன்று முதல் சென்னையை அடுத்த ஆவடி ரயில்நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சற்றுமுன் ஆவடி ரயில் நிலையத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன், தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல் முருகன், மாநில பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சி.கார்த்திகேயன்