முன்விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பலால் ஒருவர் வெட்டிக்கொலை!-போலீசார் விசாரணை!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி – கல்லணை சாலை, சர்க்கார்பாளையம் அருகே உள்ள பனைய குறிச்சி ஊராட்சி, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 37), இவரது வீட்டின் அருகே உள்ள சுந்தர் என்பவருக்கும், ஜெயபாலுக்கும் இடையே சில ஆண்டுகளாக மழை நீர் வடிவதில் ஏற்கனவே பலமுறை வாய் தகராறும், அடிதடியும் ஏற்பட்டுள்ளது. இதுசம்மந்தமாக சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் திருவெறும்பூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், 21/08/2022 காலை ஜெயபாலுக்கும், சுந்தர் தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மதுபோதையில் இருந்த ஜெயபால் சுந்தர் தரப்பினரை ஆபாசமாக திட்டி, கத்தியால் வெட்ட வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சுந்தர் தரப்பினர், ஜெயபாலை வெட்டுவதற்கு அவரை ஓட, ஓட விரட்டி உள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அருகில் இருந்த வேணுகோபால் நகர் பகுதிக்கு ஜெயபால் தப்பி சென்றுள்ளார். ஆனால் விடாமல் அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் ஜெயபாலை துரத்தி வந்த சுந்தர் (37), அவரது தம்பி மாசி (24), தளபதி (37) அவரது தம்பி ரகு மற்றும் ஹரி (21) ஆகிய 5 பேர் கொண்ட கும்பல், ஜெயபாலை சரமாறியாக வெட்டி படுகொலை செய்தனர். அதன்பிறகு அங்கிருந்து அனைவரும் தப்பி சென்றனர்.

சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு நடந்த இந்த பயங்கர கொலை சம்பவம் அனைத்தும், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV -closed-circuit television) பதிவாகியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த திருவெறும்பூர் காவல் நிலைய போலீசார், திருவெறும்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் எம்.அறிவழகன் உள்பட, உயர் காவல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததின் பேரில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் சம்பவம் இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

இதுசம்மந்தமாக வழக்கு பதிவு செய்துள்ள திருவெறும்பூர் காவல் நிலைய போலீசார், இந்த வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் முக்கிய தடயமாக அமைந்துள்ளதால், அதனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதி முழுவதும் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஜெயபாலும், அவரது எதிரிகளும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜெயபால் மனைவி இந்துமதி இவர் ஏற்கனவே இறந்து விட்டார், இவர்களுக்கு பிரதாப் என்ற 8 வயது மகன் உள்ளார்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply