ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையை அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.கஸ்டலின் உத்தரவிட்டார்.

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ. ஆறுமுகசாமி அவர்கள் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (27.08.2022) தலைமைச் செயலகத்தில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.ஆறுமுகசாமி அவர்கள் சந்தித்து விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வழங்கினார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா கடந்த 5.12.2016 அன்று காலமானது குறித்து விசாரிப்பதற்காக கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 25.09.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ. ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இவ்விசாரணை ஆணையத்தின் கால வரம்பு 24.08.2022 அன்று முடிவுற்ற நிலையில், இன்று (27.08.2022) தமிழ்நாடு முதலமைச்சரிடம் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வழங்கினார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply