தமிழக மக்களின் நலனுக்காக மாநில அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கூறியுள்ளார்.

சேலத்தில் 45 நாட்கள் நடைபெறும் அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்துப் பேசிய அவர், அரசின் திட்டங்கள் குறித்து விளக்கும் காட்சி அரங்குகள் இதில் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்கள் அதனை பார்வையிடுவதன் மூலம் நலத்திட்ட உதவிகளை எளிதாகப் பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய செய்தித்துறை அமைச்சர் திரு. சாமிநாதன் பொதுமக்களின் தேவையை அறிந்து மாநில அரசு புதிய திட்டங்களை கொண்டு வருவதாக தெரிவித்தார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னின்று நடத்தியதன் மூலம் தமிழகத்தின் புகழை உலக மக்கள் அறிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சேலத்தில் நடைபெறும் இந்த அரசு பொருட்காட்சியில் 26 அரசுத்துறை அரங்குகளும் 6 அரசு சார்பு நிறுவனங்களின் அரங்குகளும் இடம் பெற்றுள்ளன.

சி.கார்த்திகேயன்

Leave a Reply