அரசு மருத்துவமனைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம்!– மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்.

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவமனைகளுக்கும் ஒரு வாரத்திற்குள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 10 ஆவது நபராக வெற்றிகரமாக இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட செல்வகுமார் என்பவரைச் சந்தித்து நலம் விசாரித்த பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து பேசினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply