குற்ற சம்பவங்களை தடுக்க திருச்சி, பனையக்குறிச்சியில் புதிய காவல் உதவி மையம்.

திருட்டு, வழிப்பறி, கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் உட்கோட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருச்சி – கல்லணை சாலையில் பனையக்குறிச்சியில் புதிய காவல் உதவி மையத்தை திருச்சி மாவட்ட காவல் நிர்வாகம் அமைத்துள்ளது. இந்த காவல் உதவி மையம் இன்று (19/10/2022) திறக்கப்பட உள்ளது.

இந்த காவல் உதவி மையத்தை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சிக்கு திருவெறும்பூர் காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் எம். அறிவழகன், திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ். சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவெறும்பூர் காவல் நிலைய போலீசார் செய்துள்ளனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply