முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதற்காக அரசுமுறை பயணமாக டிசம்பர் 28 ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.

நடிகரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இவ்விழாவில் நிச்சயம் பங்கேற்பார் என்று தெரிகிறது. இதனால் வழக்கத்தைவிட மிக பிரமாண்டமான அரசு விழாவாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விழா திருச்சி அண்ணா விளையாட்டரங்கு மைதானத்தில் நடைப்பெற இருப்பதால், அதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்து வருகிறார்.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply