பிப்ரவரி 18 மற்றும் 19-ம் தேதிகளில் குடியரசுத் தலைவர் தமிழ்நாடு வருகை.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிப்ரவரி 18 மற்றும் 19-ம் தேதிகளில் தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

கோயமுத்தூரில் ஈஷா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மஹா சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிப்ரவரி 18-ம் தேதி பங்கேற்கிறார்.

பிப்ரவரி 19-ம் தேதி உதகமண்டலம் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களிடையே  உரையாற்றுகிறார்.

திவாஹர்

Leave a Reply