அகில இந்திய காவல் திறனாய்வுப் போட்டியில் சாதனை படைத்த தமிழ்நாடு காவல்துறை வீரர்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்ற 66-ஆவது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்று சாதனைப் படைத்த தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் சந்தித்து, பதக்கங்கள் மற்றும் கேடயங்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். 66-ஆவது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டி, மத்திய பிரதேச மாநிலம், போபாலில், கடந்த 13.02.2023 முதல் 17.02.2023 வரை நடைபெற்றது.

இதில் அறிவியல் சார்ந்த புலன் விசாரணை திறன் போட்டி, கணினி திறன் போட்டி, வெடிகுண்டு தடுப்புத் திறன் போட்டி (நாசவேலை), மோப்ப நாய் திறன் போட்டி, வீடியோ படம் எடுத்தல் திறன் போட்டி மற்றும் தொழில் ரீதியாக புகைப்படம் எடுக்கும் திறன் போட்டி ஆகிய போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறையிலிருந்து 70 பேர் கலந்து கொண்டனர்.

கே.பி.சுகுமார்

Leave a Reply