மத்திய அரசு வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தியிருப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தற்பொழுது மத்தியஅரசு கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியிருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் கேஸ் சிலிண்டர் என்பது அத்தியாவசிய தேவையா இருக்கிறது.

ஏற்கனவே தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கேஸ் சிலிண்டரின் விலையை குறைக்கும் வகையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 மானியம் அளிப்போம் என்று கொடுத்த வாக்குறுதியை இதுவைர நிறைவேற்றாமல் இருக்கிறது.இச்சூழலில் மத்திய அரசு வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் ஏழை, எளிய நடுத்தர மக்களின் பொருளாதார சுமை கூடும்.

எனவே மத்திய அரசு உயர்த்தப்பட்டு இருக்கும் கேஸ் சிலிண்டரின் விலையை திரும்ப பெற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply