தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.3.2023) தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில், தலைமைச் செயலக பணியாளர்களுக்காக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், அப்போலோ மருத்துவமனையோடு இணைந்து நடத்தும் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து, முகாமில் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டார்.

தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர்களுக்கு அப்போலோ மருத்துவமனையின் சார்பில் முழு உடல் பரிசோதனை முகாம் 17.3.2023 முதல் 27.3.2023 வரை நடைபெறவுள்ளது. இப்பரிசோதனை முகாமில் சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, கொலஸ்ட்ரால், இருதய பரிசோதனை, சிறுநீரகப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி., எக்ஸ்ரே, அல்ட்ரா சோனோகிராம், எக்கோ போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இம்மருத்துவ முகாம் மூலம் சுமார் 5000 பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

எஸ்.திவ்யா

Leave a Reply