அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது!- எடப்பாடி கே.பழனிசாமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது.

வேட்புமனு பரிசீலனை 20-ம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை 21-ம் தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.பி.சுகுமார்

Leave a Reply