இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் செந்தில்பாலாஜி உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் அறிக்கை.

செந்தில்பாலாஜி

இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் செந்தில்பாலாஜி உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ்.

டாக்டர். ஏ.ஆர்.ரகுராம், இருதய அறுவை சிகிச்சை நிபுணர்.

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான மருத்துவர்கள் இன்று (ஜூன் 21) காலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அவருடைய இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் இருந்த 4 அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்து செந்தில்பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply