நிதி ஆதாரங்களை அர்ப்பணிப்பதும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உதட்டளவில் சேவை செய்வதும் மட்டும் போதாது; உறுதியான விளைவுகளில் கவனம் செலுத்த வேண்டும்!-குடியரசுத் துணைத் தலைவர்.

குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் “ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பங்களிப்பு கணிசமானதாக இருக்க வேண்டுமே, அல்லாமல் மேலோட்டமாக இருக்கக்கூடாது என்று  கூறியுள்ளார். நிதி ஆதாரங்களை வெறுமனே அர்ப்பணிப்பது மட்டும் போதாது என்று கூறிய அவர், எந்தவொரு ஆராய்ச்சியின் முக்கியத்துவமும் உறுதியான விளைவுகளின் அடிப்படையில் அளவிடப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

“நிதி ஆதாரங்கள் உறுதியளிக்கப்படுகின்றன என்பதற்காக, நாம் பெருமைப்பட முடியாது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு என்பது உறுதியான விளைவுகளுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

புதுதில்லி, பூசா சாலையில் இன்று நடைபெற்ற 83-வது சிஎஸ்ஐஆர் நிறுவன தின கொண்டாட்டங்களில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், தற்கால சூழ்நிலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து கவனத்தை ஈர்த்தார். மென்மையான ராஜதந்திரம் மற்றும் தேசிய பாதுகாப்புடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஒருங்கிணைந்தவை என்று திரு தன்கர் கூறினார்.

“ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முதலீடு நீடிக்கும்….. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு இந்த நாட்களில் பாதுகாப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எனவே முதலீடு என்பது நாட்டுக்கானது. முதலீடு என்பது வளர்ச்சிக்கானது. முதலீடு என்பது நிலைத்தன்மைக்கானது” என்று அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய சூழலை சுட்டிக்காட்டிய திரு தன்கர், அறிவியல் சமூகத்தினருக்கான அங்கீகாரம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது குறித்து திருப்தி தெரிவித்தார். “கடந்த சில ஆண்டுகளில் அறிவியல் சமூகத்திற்கான அங்கீகாரம் அதிகரித்துள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது குறித்து அரசு மிகவும் தீவிரமாக இருப்பது உட்பட பல வழிகளில் இது அதிகரித்துள்ளது, பிரதமரின் இதயமும் ஆன்மாவும் விஞ்ஞான சமூகத்தில் ஆழமாக உள்ளது” என அவர் கூறினார்.

இந்திய விஞ்ஞானிகளின் ஆற்றலின் மீது பிரதமர் கொண்டுள்ள மரியாதை மற்றும் நம்பிக்கைக்கு திரு தன்கர் பாராட்டு தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் அமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தை அங்கீகரித்த திரு தன்கர், “நமது விஞ்ஞானிகள் தங்களது ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், விரிவுபடுத்தவும், அவர்களின் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், தங்களது புதுமையான திறன்களை வெளிக்கொணர்வதன் மூலம் நாட்டிற்கு பங்களிக்கவும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு தற்போது உருவாகி வருகிறது” என்று குறிப்பிட்டார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக முதலீடு செய்யுமாறு கார்ப்பரேட்டுகளுக்கு அழைப்பு விடுத்த அவர், “ஆட்டோமொபைல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்திய நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் உள்ளன. நமது நாட்டின் அளவு, அதன் திறன், அதன் நிலை மற்றும் அதன் வளர்ச்சிப் பாதை ஆகியவற்றைப் பார்க்கும்போது, நமது கார்ப்பரேட்டுகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட முன்வர வேண்டும்” என்று பிரதமர் கூறினார்.

சி.எஸ்.ஐ.ஆர் விஞ்ஞான ரீதியாக ஒரு கிரியா ஊக்கி என்று குறிப்பிட்ட திரு தன்கர், “இது உங்கள் நிறுவன நாள், ஆனால் இது பாரதத்தின் உறுதியான அடித்தளத்துடன் ஒருங்கிணைந்து இணைக்கப்பட்டுள்ளது. இந்த கிரகத்தில் மிகவும் துடிப்பான, செயல்பாட்டு ஜனநாயகத்தின் அடித்தளங்களை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எழுச்சி பெற்று வரும் ஒரு தேசத்தின் அடித்தளத்தை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள், மேலும் எழுச்சி தடுக்க முடியாதது”என்றார்.

எந்தவொரு நாட்டிற்கும் வளர்ச்சி இயந்திரமாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கை வலியுறுத்திய அவர், இந்த இயந்திரம் முதன்மையாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டால் இயக்கப்படுகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இந்திய கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தற்போதைய அணுகுமுறை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த திரு தன்கர், வெறும் உதட்டளவில் மட்டும் பேசுவதை விட கணிசமான பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்

கல்வி நிறுவனங்களுக்குள் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் கல்வி ஆதாயங்களுக்காக மட்டுமே உந்தப்படக்கூடாது என்று வலியுறுத்திய அவர், “ஆராய்ச்சி என்பது ஒரு உருவகப்படுத்துதல் அல்ல. ஆராய்ச்சி என்பது ஆராய்ச்சி” என்றார்.

மனித வளங்கள் மற்றும் நிறுவனங்களில் முதலீடுகள் உண்மையான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சியை நோக்கி இயக்கப்படுவதை உறுதி செய்ய நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) நிறுவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

நவீன இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிலப்பரப்பை வடிவமைப்பதில் சிஎஸ்ஐஆர் ஆற்றிய முக்கிய பங்கை ஒப்புக் கொண்ட திரு தன்கர், இந்தியாவின் அறிவியல் வரலாற்று பாரம்பரியத்தை வலியுறுத்தினார், “நாம் நமது வரலாற்று கண்ணோட்டத்திற்குள் சென்றால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது பாரதம் அறிவியல் வலிமையைக் கொண்டிருந்ததைக் காணலாம். நாம் உலகளாவிய தலைவர்களாக இருந்தோம்; அறிவியல் அறிவு என்று வரும்போது நாம் உலகின் மையமாக இருந்தோம்” என்று அவர் கூறினார்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நாடு தனது வழியை இழந்த நிலையில், இப்போது அறிவியல் உலகில் நமது கடந்த கால பழமையான பெருமையை மீண்டும் பெறும் பாதையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக, NASC வளாகத்தில் ‘CSIR கருப்பொருள் கண்காட்சி 2024’ -ஐயும் குடியரசுத் துணைத் தலைவர் தொடங்கி வைத்தார்.

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் கே. சூட், இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், சிஎஸ்ஐஆர் நிறுவன நாள் சொற்பொழிவாளருமான டாக்டர் கே. ராதாகிருஷ்ணன், சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி, சிஎஸ்ஐஆர் நிறுவன நாள் கொண்டாட்டத்தின் தலைவர் டாக்டர் ஜி. மகேஷ் மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply