குடியரசுத் தலைவர் நாளை தெலங்கானா செல்கிறார்.

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை (28.09.2024) தெலங்கானாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

அங்கு ஒருநாள் பயணம் மேற்கொள்ளும் அவர், ஹைதராபாத்தில் உள்ள நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். செகந்திராபாத்தில் உள்ள ராஷ்டிரபதி நிலையத்தில் பாரதிய கலா மஹோத்சவ் 2024-யையும் அவர் தொடங்கி வைக்கிறார். 8 நாட்கள் நடைபெறும் கலா மஹோத்சவ் நிகழ்ச்சியில் அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுராவின் கலை, கலாச்சாரம், கைவினை மற்றும் சமையல் தொடர்பான  பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் இடம் பெறும்.

Leave a Reply