நீண்ட தூர பயிற்சிக்கான  முதல் பயிற்சி அணி ஓமனின் மஸ்கட்டுக்கு சென்றுள்ளது.

நீண்ட தூரப்பயிற்சிக்காக இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சி அணியுடன் இந்திய கடற்படை கப்பல்களான திர், ஷர்துல், இந்தியக் கடலோரக் காவல்படை கப்பல் வீரா ஆகியவை அக்டோபர் 5, 24 அன்று ஓமனில் உள்ள மஸ்கட் வந்தடைந்தன. இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையே கடல்சார் துறையில் தற்போதுள்ள பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதை இந்த அழைப்பு குறிக்கிறது.

2024, அக்டோபர் 5 முதல் 9 வரை நடைபெறும் இந்தப் பயணத்தின்போது, இந்திய கடற்படை ஓமன் ராயல் கடற்படையுடன் கடல்சார் பாதுகாப்பு, துறைமுக தொடர்பு, கூட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடும். இரு கடற்படைகளுக்கும் இடையிலான பயிற்சி பரிமாற்றங்கள், தொழில்முறை தொடர்புகள், நட்பு விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றிலும் இந்தப் பயிற்சித்தொடர் கவனம் செலுத்தும். கடந்த 10 ஆண்டுகளில், ஓமன் நாட்டின் மஸ்கட்டுக்கு முதலாவது பயிற்சி அணி கப்பல் பயணம் மேற்கொள்வது இது மூன்றாவது முறையாகும். இந்த கலந்துரையாடல்கள், கடற்படை ஒத்துழைப்பின் பயன்களை வலுப்படுத்துவதிலும், இரு கடற்படைகளுக்கு இடையே தற்போதுள்ள கூட்டாண்மையை பராமரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தென் கடற்படை கமாண்டின் கொடி அதிகாரி கமாண்டிங் இன் சீஃப் வி.ஏ.டி.எம் வி.ஸ்ரீனிவாஸ் 2024 அக்டோபர் 6 முதல் 9 வரை ஓமன் சுல்தானகத்திற்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அவர், தெற்கு சுல்தானின் ஆயுதப் படைகளின் தலைமை தளபதி அப்துல்லா பின் காமிஸ் பின் அப்துல்லா அல் ரைசி, ஓமன் ராயல் கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் சைஃப் பின் நாசர் பின் மொஹ்சென் அல்-ரஹ்பி ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார். ஓமனில் உள்ள முக்கிய பாதுகாப்பு மற்றும் பயிற்சி நிலையங்களையும் அவர் பார்வையிடுவார்.

இந்திய கடற்படையும், ஓமன் ராயல் கடற்படையும் பல்வேறு துறைகளில் பயிற்சி மற்றும் கூட்டு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில், இந்திய கடற்படை மற்றும் ஓமன் ராயல் கடற்படை ஊழியர்கள் பேச்சுவார்த்தையின் 6 வது பதிப்பு ஜூன் 24 அன்று புதுதில்லியில் நடைபெற்றது.

Leave a Reply