தைப்பூச தினமான இன்று அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முருகப்பெருமானின் தெய்வீக அருளானது வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்துடன் நம்மை வழிநடத்தட்டும். இந்தப் புனிதமான நேரத்தில், அனைவருக்கும் மகிழ்ச்சி, சிறந்த ஆரோக்கியம் மற்றும் வெற்றிக்காக தான் பிரார்த்திக்கொள்வதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதவிட்டிருப்பதாவது;
“அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் அன்பான தைப்பூச வாழ்த்துக்கள்!
முருகப்பெருமானின் தெய்வீக அருளானது வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்துடன் நம்மை வழிநடத்தட்டும். இந்தப் புனிதமான நேரத்தில், அனைவருக்கும் மகிழ்ச்சி, சிறந்த ஆரோக்கியம் மற்றும் வெற்றிக்காக நான் பிரார்த்திக்கிறேன்.
இந்த நாள் நம் வாழ்வில் அமைதியையும் நல்லெண்ணங்களையும் கொண்டு வரட்டும்!
எஸ்.சதிஸ் சர்மா