ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து ஒரு கும்பல் மனித கழிவு மற்றும் சாக்கடை நீரை ஊற்றி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது .
தூய்மைப் பணியாளர் போர்வையில் சவுக்கு சங்கர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்கள் மேற்கண்ட அராஜகத்தை அரங்கேற்றி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் இத்தகைய வீபரீதங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இல்லையேல் ஜனநாயகத்தின் அடித்தளம் செல்லரித்துப் போய் விடும்.
கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முடியாத கோழைகள் இப்படி இழிவான செயலில் ஈடுபடுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
இந்த தாக்குதல் பின்னணியில் உள்ளவர்கள் எவராக இருந்தாலும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்