அரசு ஊழியர்கள் மார்ச் 2025 மாத சம்பளம் எந்த தேதியில் விடுவிக்கப்படும் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. இம்மாதத்துடன் நடப்பு நிதியாண்டு நிறைவடைகிறது. எனவே கணக்குகள் முடிக்கப்பட்டு விரைவாக பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அரசை பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் கடைசி தேதி வந்துவிட்டால் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை விடுவித்து விடும். அதன்படி, 30 அல்லது 31ஆம் தேதி ஊழியர்களின் வங்கி கணக்கில் சம்பளப் பணம் வரவு வைக்கப்படும். ஒருவேளை கடைசி நாள் விடுமுறை நாளாக இருந்தால் அதற்கு முந்தைய நாள் சம்பளம் போடப்படும். இந்நிலையில் நடப்பு மார்ச் மாதத்திற்கான சம்பளத் தேதியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.திவ்யா