சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இன்று புத்தாண்டின் புனிதமான தொடக்கத்தையும், நவராத்திரியின் முதல் நாளையும் குறிக்கும் வகையில் பேசிய அவர், சத்தீஸ்கர் மாநிலம் மாதா மகாமாயாவின் பூமி என்றும், மாதா கௌசல்யாவின் தாய்வழி வீடு என்றும் கூறினார். தெய்வீகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஒன்பது நாட்களின் சிறப்பு முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். நவராத்திரியின் முதல் நாளில் சத்தீஸ்கரில் தனது பாக்கியத்தை வெளிப்படுத்திய அவர், பக்த சிரோமணி மாதா கர்மாவை கௌரவிக்கும் வகையில் சமீபத்தில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டதற்காக அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். சத்தீஸ்கரில் ராமர் மீதான தனித்துவமான பக்தியை எடுத்துக்காட்டுகின்ற ராம நவமி கொண்டாட்டத்துடன் நவராத்திரி விழா முடிவடையும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். சத்தீஸ்கர் மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், அவர்களை ராமரின் தாய்வழி குடும்பம் என்று குறிப்பிட்டார்.
இந்த புனிதமான தருணத்தில் மொஹபட்டா சுயம்பு சிவலிங்க மகாதேவின் ஆசீர்வாதங்களுடன், சத்தீஸ்கரின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பை திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். ஏழைகளுக்கான வீட்டுவசதி, பள்ளிகள், சாலைகள், ரயில்வே, மின்சாரம், எரிவாயு குழாய்கள் உள்ளிட்ட ₹ 33,700 கோடி மதிப்பிலான திட்டங்களின் தொடக்கம், அடிக்கல் நாட்டப்பட்டதை அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் சத்தீஸ்கர் குடிமக்களின் வசதிகளை மேம்படுத்துவதையும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டவை என்று அவர் கூறினார். இந்த வளர்ச்சித் திட்டங்கள் மூலம் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்காக அனைவருக்கும் அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தங்குமிடம் வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், அதை ஒரு பெரிய விஷயம் என்று அழைத்தார். சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற ஒருவரின் கனவை நனவாக்குவது ஈடு இணையற்ற மகிழ்ச்சி என்று கூறினார். நவராத்திரி, புத்தாண்டை முன்னிட்டு, சத்தீஸ்கரில் மூன்று லட்சம் ஏழைக் குடும்பங்கள் தங்கள் புதிய வீடுகளில் நுழைவதை அவர் எடுத்துரைத்தார். இந்த குடும்பங்களுக்கு அவர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். சத்தீஸ்கரில் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டுவசதி என்ற கனவு முன்பு அதிகாரத்துவ கோப்புகளில் தொலைந்துவிட்டது என்று குறிப்பிட்ட அவர், தமது தலைமையின் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையே இந்த வீடுகளின் நனவை நனவாக்கியது என்று கூறினார். இந்தக் கனவை நிறைவேற்றுவதில் அரசின் உறுதிப்பாட்டை அவர் நினைவுகூர்ந்தார். திரு. விஷ்ணு தியோ தலைமையின் கீழ், அமைச்சரவை 18 லட்சம் வீடுகளைக் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது என்றும், அவற்றில் மூன்று லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இவற்றில் பல இல்லங்கள் பழங்குடியினர் பகுதிகளில் உள்ளன என்றும், பஸ்தார், சர்குஜாவில் உள்ள குடும்பங்கள் பயனடைகின்றன என்றும் மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், தற்காலிக தங்குமிடங்களில் பல தலைமுறைகளாக கஷ்டங்களை அனுபவித்து வரும் குடும்பங்களுக்கு இந்த இல்லங்கள் ஏற்படுத்தும் மாற்றத்தக்க தாக்கத்தை அவர் எடுத்துரைத்தார்.
“இந்த வீடுகளைக் கட்டுவதற்கு அரசு உதவி அளித்த நிலையில், பயனாளிகள் தாங்களாகவே தங்கள் கனவு இல்லங்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்தனர்” என்று கூறிய திரு மோடி, இந்த வீடுகள் வெறும் நான்கு சுவர்கள் அல்ல, மாறாக வாழ்க்கையின் மாற்றம் என்றார். இந்த வீடுகளில் கழிப்பறைகள், மின்சாரம், உஜ்வாலா எரிவாயு இணைப்புகள் மற்றும் குழாய் நீர் போன்ற அத்தியாவசிய வசதிகளுடன் தயார்படுத்துவதற்கான முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் குறிப்பிட்ட அவர், இந்த இல்லங்களில் பெரும்பாலானவை பெண்களுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிட்டார். முதன்முறையாக ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்திருப்பதை அவர் குறிப்பிட்டார். இந்த பெண்களின் முகங்களில் பிரதிபலிக்கும் மகிழ்ச்சி, ஆசீர்வாதங்களுக்கு அவர் தமது நன்றியைத் தெரிவித்தார். இது தமது மிகப்பெரிய சொத்து என்று அவர் கூறினார்.
திவாஹர்