பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் மொத்தம் 18,658 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள நான்கு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மகாராஷ்டிரா, ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 15 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த நான்கு திட்டங்கள், தற்போதுள்ள இந்திய ரயில்வே கட்டமைப்பை சுமார் 1247 கிலோ மீட்டர் அளவுக்கு அதிகரிக்கும்.
இந்த திட்டங்களின் விவரம்:
*சம்பல்பூர் – ஜராப்டா 3-வது, 4 வது பிரிவு
* ஜார்சுகுடா – சசோன் 3- வது, 4-வது பிரிவு
* கர்சியா – நயா ராய்ப்பூர் – பர்மல்காசா 5-வது, 6-வது பிரிவு
* கோண்டியா – பல்ஹர்ஷா இரட்டை ரயில் பாதைத் திட்டம்
மேம்படுத்தப்பட்ட ரயில் பாதைத் திறனானது ரயில் போக்குவரத்தை மேம்படுத்தி, ரயில்வேத் துறைக்கு மேம்பட்ட செயல்பாட்டை வழங்கும். இந்த மல்டி-டிராக்கிங் திட்டங்கள் செயல்பாடுகளை எளிதாக்கி, நெரிசலைக் குறைக்கும். இந்தத் திட்டங்களின் மூலம் 19 புதிய நிலையங்கள் கட்டப்படும். இவற்றால் 3350 கிராமங்களும் அப்பகுதிகளில் உள்ள சுமார் 47.25 லட்சம் மக்களும் பயன் அடைவார்கள்.
எம்.பிரபாகரன்