கோயில்களின் மூலம் கிடைக்கப்பெற்ற தங்கக் கட்டிகளை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததற்கான பத்திரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.04.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் 21 திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்களில் திருக்கோயிலுக்கு பயன்பாடற்ற பொன் இனங்களை உருக்கி கிடைக்கபெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்தத் தங்கக் கட்டிகளை பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததற்கான அடையாளமாக திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களின் அறங்காவலர் குழு தலைவர்கள் வி.எஸ்.பி. இளங்கோவன், கே.எம். சுப்பிரமணியன், இணை ஆணையர்கள் எ.ஆர். பிரகாஷ், செ.மாரிமுத்து, பி. ரமேஷ் மற்றும் உதவி ஆணையர்/செயல் அலுவலர் இரா. முத்துராமலிங்கம் ஆகியோரிடம் தங்க முதலீட்டிற்கான பத்திரங்களை வழங்கினார்.
கே.பி.சுகுமார்