தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார்!- செந்தில் பாலாஜி உட்பட நான்கு பேர் புதிய அமைச்சர்களாகப் பதவேற்றனர்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மதியம் 3:30 மணிக்கு செந்தில் பாலாஜி உட்பட நான்கு பேர் புதிய அமைச்சர்களாகப் பதவேற்றனர்.

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 3.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.

நேற்றிரவு அமைச்சரவை மாற்றம் தொடர்பாக சனிக்கிழமை இரவில் ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டனர்.

செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோ.வி.செழியன் மற்றும் பனமரத்துப்பட்டி இரா.ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுனர்.

Leave a Reply