64-வது என்டிசி பாடத்திட்டத்தின் ஆசிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு.

64-வது தேசிய பாதுகாப்புக் கல்லூரி பாடத்திட்டத்தின் ஆசிரியர்கள் மற்றும் பாடநெறி உறுப்பினர்கள் இன்று (அக்டோபர் 1, 2024) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.

 இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் , துடிப்பான உலகளாவிய புவிசார் அரசியல் சூழல் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது என்று கூறினார். சமீப காலங்களில் நிகழ்வுகள் கட்டவிழ்ந்த வேகம், அநேகமாக ஒரு தசாப்தத்திற்கு முன்னரே கணித்திருக்க முடியாது. எனவே, அனைத்து அதிகாரிகளும், குடிமைப் பணி அல்லது பாதுகாப்பு சேவைகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பாதிப்புகள், அத்தகைய சவால்களைச் சமாளிக்க உதவும் பலம் குறித்து அறிந்திருக்க  வேண்டும். தொழில்நுட்பத்தை தங்கள் நிறுவனங்கள், நாடுகள் மற்றும் மனிதகுலத்தின் பெரிய நன்மைக்காக பயன்படுத்த முடியும். புதுமை என்பது அவர்களை எதிர்காலத்திற்கு தயாராக வைத்திருக்கும் மற்றொரு காரணியாகும் என்று அவர் கூறினார்.

இன்று, நமது பாதுகாப்பு கவலைகள் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதைத் தாண்டி, பொருளாதாரம், சுற்றுச்சூழல், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு பிரச்சினைகள் போன்ற தேசிய நல்வாழ்வின் பிற பகுதிகளையும் உள்ளடக்கியது என்று குடியரசுத் தலைவர் கூறினார் . இந்த கவலைகளை நிவர்த்தி செய்ய தீவிர ஆராய்ச்சி தேவை என்று அவர் கூறினார்.

சைபர் தாக்குதல்கள் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக குடியரசுத் தலைவர் கூறினார் . சைபர் தாக்குதல்களைக் கையாள்வதற்கும் எதிர்கொள்வதற்கும் உயர்தர தொழில்நுட்ப தலையீடு மற்றும் வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் சிறப்பு மனித வளம் தேவைப்படுகிறது. இதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்கும் திறன் கொண்ட பாதுகாப்பான நாடு தழுவிய அமைப்பை உருவாக்க சிவில் சேவைகளும் ஆயுதப் படைகளும் கைகோர்க்க வேண்டிய பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.  தொழில்நுட்ப முன்னேற்றங்கள் டிஜிட்டல் உள்கட்டமைப்பை அமைத்துப் பயன்படுத்துவதை நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன என்று அவர் கூறினார். ஆளுகை அமைப்புகளில் ஏராளமான தரவுகள் மற்றும் முக்கியமான தகவல்களும் கிடைக்கின்றன, அவை பாதுகாப்பற்றதாக விடப்பட முடியாது. இந்த பிரச்சினையின் தீவிரத்தை அனைவரும் புரிந்துகொண்டு அதை தீர்க்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply