தமிழக அரசு மதுரையில் பெய்திருக்கும் கனமழையால் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றஉடனடி பணிகளை, அவசியப் பணிகளை மேற்கொண்டு மதுரை மக்களைப் பாதுகாக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

மேலும் தொடர் மழையின் தாக்கத்தில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கை தேவை

தமிழக அரசு மதுரை உள்ளிட்ட மற்றப் பகுதிகளில் மழை பெய்ததால் ஏற்பட்டுள்ள
பாதிப்பில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க வேண்டும்.
தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர்
தேங்கிய நிலையில் மக்கள் அதிக சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக மதுரை மாநகர மக்கள் மழையால் தண்ணீர் தேங்கிய நிலையில்
பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மதுரை மாநகர மக்களுக்கு மாநகராட்சி பணிகளை முழுவீச்சில்
மேற்கொண்டு, நிவாரணம் கொடுத்து அவர்களுக்கு உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்து
கொடுக்க வேண்டும்.
அதே போல வட பகுதிகளில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்யும் என
வானிலை செய்தி வெளிவந்திருப்பதால் தாழ்வான பகுதியில் இருப்பவர்கள், விவசாயிகள் மற்றும்
ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.
எனவே தமிழக அரசு, மழையால் பாதிக்கப்படும் மாவட்ட மக்களுக்கு உடனடி உதவிக்கரம்
நீட்ட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்
தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply