பாரதப் பிரதமர் உருவப் படத்தை எரித்த செயலை த.மா.கா வன்மையாக கண்டிக்கிறது!-‌ ஜி.கே.வாசன் அறிக்கை .

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் ஒரு சிலரால் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் உருவப்படம் எரிக்கப்பட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.
நாடும், நாட்டு மக்களும் வளத்தோடும், வலிமையோடும் திகழ அனுதினமும் அயராது பாடுப்பட்டு வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உருவப் படத்தை எரித்த செயல் மிகவும் கண்டிக்கதக்கது. ஜனநாயகத்தில் இது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இச்செயலை கண்டித்து நேற்று கடலூரில் தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன முழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அவர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
தவறு செய்தவர்களை விட்டுவிட்டு, ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்திருப்பது சரியானதல்ல. பாரதப் பிரதமர் உருவப் படத்தை எரித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்திருக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சியினரை எந்தவித வழக்கும் பதியாமல் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply