குண்டும் குழியுமாக கிடக்கும் தஞ்சை -நாகை தேசிய நெடுஞ்சாலை! -செப்பனிட வலியுறுத்தி மறியல் போராட்டம்!

தஞ்சை – நாகை தேசிய நெடுஞ்சாலையை விரைவுபடுத்திட வேண்டியும்,  தற்போதைய சாலையை செப்பனிட வலியுறுத்தியும் கடையடைப்புடன் கூடிய  சாலை மறியல் போராட்டம், தி.மு.க மாவட்ட செயலாளர் பூண்டி. கே.கலைவாணன் தலைமையில், 30 மேற்பட்ட சங்கங்கள் கலந்து கொண்டு இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் தஞ்சை – நாகை, மன்னார்குடி இணைப்பு சாலை அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

தஞ்சாவூர் – நாகை  வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை பல வருடங்களுக்கு மேலாக குண்டும், குழியுமாகவும், பள்ளமாகவும், மிகவும் மோசமாகவும் சாலையை பல இடங்களில் காணாமல் தேடுவது போலவும் உள்ளது. ஆகவே, சாலையில் செல்லும் பொது மக்கள் பலர் தினந்தோறும் விபத்துக்களுக்கு உள்ளாகி தங்களது உடல் உறுப்புகளை இழக்க நேரிடுவதுடன், உயிர் இழப்பும் அதிகளவில் நடைபெறுகிறது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும்  மாணவ, மாணவியர்கள், முதியோர்கள், நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே,  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாலை பணிகளை, பொது மக்கள் நலன் கருதி உடனடியாக தொடங்க வேண்டியும், தற்போதை சாலையை செப்பனிட வலியுறுத்தி கடையடைப்புடன் கூடிய மாபெரும் சாலை மறியல் போராட்டம் இன்று நடைப்பெற்றது.

இதில் திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, ரோட்டரி சங்கம். லயன்ஸ் சங்கள், பொறியாளர், விவசாய மற்றும் அனைத்து சேவை சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

-க.மகேஷ்வரன்.

 

Leave a Reply