மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் காவல்துறை சார்பில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு மூலம், செங்கம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி கலந்துகொண்டு குடிபழக்கத்தால் ஏற்படும் தீமைகள், அதிவேகமாய் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து விளக்கி பேசினார்.

தங்கள் பெற்றோர்கள் கிராம பொதுமக்களிடம் விழிப்புணர்வு கருத்துக்களை மாணவர்கள் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், முதல்வர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் காவல் துறையினர் கலந்துகொண்டனர்.

– செங்கம் சரவணக்குமார்.

Leave a Reply