கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தவர் ஏரிக்கரையில் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் ஜாபர்கான்(வயது45), இவர் அதே பகுதியை சேர்ந்த தேங்காய் வியாபாரி உமர்கானிடம்(வயது48), கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதுதொடர்பாக இருவருக்குள்ளும் தகராறு இருந்து வந்தது.

கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக செங்கம் காவல் நிலையத்தில் உமர்கான் மீது, ஜாபர்கான் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக ஜாபர்கான் திடீரென மாயமானார். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், பல இடங்களில் தேடி வந்த நிலையில், வளையாம்பட்டு பகுதியில் உள்ள ஏரிக்கரையில், உடலில் காயங்களுடன், ஜாபர்கான் பிணமாக கிடந்தார்.

அவரது உடலை கைப்பற்றிய செங்கம் காவல் துறையினர் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் முழுமையான விபரம் தெரிய வரும்.

-செங்கம் சரவணக்குமார்.

Leave a Reply