திருச்சி, நவல்பட்டு அருகே கார் திடீரென தீ பற்றி எரிந்தது!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு, அண்ணா நகர் பகுதியில், திருமயத்தைச் சேர்ந்த பாய்லர் ஆலை ஊழியர் கிருஷ்ணகுமார் ஓட்டி வந்த கார் இன்று மாலை திடீரென தீ பற்றி எரிந்தது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நவல்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இதுக் குறித்து நவல்பட்டு காவல் நிலைய போலிசார் விசாரணைச் செய்து வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply