திருச்சி குண்டூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது, அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி பலி!

திருச்சி, ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த மாரிமுத்து மற்றும் அவரது மனைவி சுதா ஆகியோர், மண்டையூரில் நடந்த ஒரு திருமணத்திற்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, குண்டூர் அருகே அரசு பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி இருவரும் பலியானார்கள்.

இதுக்குறித்து நவல்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply